2025 ஜூன் 21, சனிக்கிழமை

டக்ளஸின் ஆலோசனையுடன் உதயமாகிவரும் கைவினை கைப்பணிக் கிராமம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 02 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹம்பாந்தோட்டை கவான் திசபுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கைவினை கைப்பணி கண்காட்சி மற்றும் விற்பனைக்கூடங்களின் நிர்மாணப் பணிகள் தொடர்பில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று(02) ஆராய்ந்தறிந்து கொண்டார்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஹம்பாந்தோட்டை பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படடு வரும் குறித்த கைப்பணிக் கிராமத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பிலான தற்போதைய நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டது.

ஏற்கெனவே நிறைவுபெற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர்; துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் கடடட ஒப்பந்தகாரர்களால் முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அவற்றிலுள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்; இதன்போது விசேட கவனம் செலுத்தியிருந்தார்.

இதனிடையே ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்களிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக விசேட குழுவொன்றை அமைத்து அதுதொடர்பில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்ட அமைச்சர், தாம் குறித்த பகுதிக்கு இம்மாத நடுப்பகுதியில் விஜயம் மேற்கொண்டு பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்ததுடன், புதிதாக செய்யப்படவுள்ள வேலைத்திட்டங்களை  தொடர்ந்து முன்னெடுக்குமாறும் ஒப்பந்தகாரர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கவான் திசபுர பகுதியில் இந்திய அரசின் 20 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் தேசிய அருங்கலைகள் பேரவைக்கென இக் கைவினை, கைப்பணிக் கிராமம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்திகீர்த்திசேன, அமைச்சின் பணிப்பாளர் அஜித் ஏக்கநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பதில் செயலாளர் சந்துரு ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .