2025 ஜூன் 21, சனிக்கிழமை

28ஆம் திகதி முதல் 'ஷில்ப 2014' கைவினை கண்காட்சி

George   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைப்பணித்துறையினை மேம்படுத்திஅதனூடாக துறை சார்ந்தோரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'ஷில்ப 2014' தேசிய கைவினை கைப்பணி கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை  (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 27 வருடங்களாக இக்கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இதில் கைவினை கைப்பணி துறைசார்ந்தோரால் வடிவமைக்கப்பட்டு மாகாண மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதன்மூலம் இவ்வாறான உற்பத்திகளை மேம்படுத்துவது மட்டுமன்றி அதனூடாக குறித்த உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் அதேவேளை துறைசார்ந்தோரை ஊக்குவிப்பதுமே எமது நோக்காகும்.

இதற்கமைவாகவே தேசிய கைவினை கைப்பணி கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் ஷில்ப 2014 தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேசிய வடிவமைப்பு நிலையம், பனை அபிவிருத்தி சபை, கித்துள் அபிவிருத்தி திட்டம் ஆகியன இணை அனுசரணை வழங்கும் நிலையில் அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உரையாற்றும்போது முழு நாட்டையும் விசாலித்து நிற்கக் கூடிய வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சு செயற்பட்டு வருகின்றது.

அதுமட்டுமன்றி நாட்டினது கைத்தொழில் துறைகளை விரிவாக்கி உற்பத்தியாளர்கள் சிறந்த வருவாயை பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி அவற்றையும் அமைச்சர்; நடைமுறைப்படுத்தியும் வருகின்றார்.
அதுமட்டுமன்றி சகலவிதமான சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக நாட்டில் முன்னேற்றம் கண்டுள்ள அதேவேளை எதிர்காலத்திலும் முன்னேற்றம் காணவேண்டுமென்றும் தெரிவித்தார்.

இதில் தேசிய அருங்கலைகள் பேரவை தலைவர் புத்தி கீர்த்திசேன, தேசிய வடிவமைப்பு நிலைய தலைவர் மார்ஷல் ஜனதா ஆகியோர் கண்காட்சியில் குறித்த நிறுவனங்களினது பங்களிப்பு மற்றும் நோக்கம் தொடர்பாக உரை நிகழ்த்தினர்.

அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அவர்கள் கண்காட்சி தொடர்பாக விளக்கவுரை நிகழ்த்தினார்.

இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை ஷில்ப - 2014 தேசிய கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக்கூடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சியில் ஆபரணம், உணவு, மரம், மட்பாண்டம், துணி, தோல், இறப்பர், உலோகம், வாத்தியக்கருவிகள், தும்பு, பனை, மற்றும் புல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மூலப்பொருட்களிலான உற்பத்திகள் காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ள அதேவேளை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .