2025 ஜூன் 23, திங்கட்கிழமை

520 ஹெரோயின் பக்கற்றுகளுடன் பெண் கைது

Super User   / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (சுபுன் டயஸ்)

ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 520 பக்கற்றுகளுடன் பெண்ணொருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைக்காலத்தில் ஒரே தடவையில் பெருந்தொகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.  இப்போதைப்பொருளின் எடை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இது  சுமார் 300 கிராம் எடையைக் கொண்டிருக்கலாம் எனவும் இதன் பெறுமதி  சுமார் 15 லட்சம் ரூபாவாக இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

34 வயதான மேற்படி பெண், இம்முற்றுகையின்போது ஹெரோயின் பக்கற்றுகளை பொதிசெய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, இரத்மலானை, தெஹிவளை, கொஹுவளை பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்தவர் என பொலிஸார் கூறுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .