2025 ஜூன் 21, சனிக்கிழமை

80 ஆவது ஆண்டு அமுத விழா

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (27)  மாலை இடம்பெற்றது.

இதன்போது, நினைவு முத்திரையும் விசேட ஞாபாகார்த்த உறையும் வெளியிடப்பட்டன.

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முத்திரை வெளியீட்டு பணியகத்தின் முத்திரை வெளியீட்டுக்கு பொறுப்பான அலுவலர் சி.என்.முனசிங்க, முன்னாள் தபால்மா அதிபர் காமினி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர். 

முதல் முத்திரையையும் ஞாபகார்த்த உறையையும் முத்திரை வெளியீட்டு பணியகத்தின் முத்திரை வெளியீட்டுக்கு பொறுப்பான அலுவலர் சி.என்.முனசிங்க வெளியிட்டு வைக்க, அதனை நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் பெற்றுக் கொண்டார். இதனை அடுத்து முதல் முத்திரையை தொழிலதிபர் ஸ்ரீ ராம் பெற்றுக்கொண்டார்.

வரவேற்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் முறையே நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின ஆட்சி மன்ற உறுப்பினர் ப.ரஜனி ராஜ், உப தலைவர் ஆனந்த சிவம் ஆகியோரும் நன்றி உரையை உப செயலாளர் பா.வெங்கடேசனும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றதுடன் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், இரத்மலானை இந்துக் கல்லூரி ஆசிரியர் துணவியூர் கேசவன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .