Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 09 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபராக ஏற்கனவே நியமனம் பெற்ற ஆர்.உதயகுமாரிடம் பொறுப்புக்களை கையளிக்க கல்வி அமைச்சும் மேல் மாகாண சபையும் இணைந்து தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க – தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.
மேற்படி அதிபர் நியமனம் தொடர்பில், இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இந்த விசேட கலந்துரையாடலில், கல்வி அமைச்சின் செயலாளர், மேல் மாகாண கல்வி அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
குறித்த கல்லூரியின் முன்னாள் அதிபர், கடந்த செப்டெம்பர் மாதம் கடமையிலிருந்து ஓய்வு பெற்றதுடன் அவரது இடத்திற்கு அதிபர் தரம் அற்ற ஆசிரியையாக கடமை புரிந்த அவரது மனைவிக்கு பொறுப்புகளை கையளித்திருந்தார்.
இந்நிலையில் பாடசாலையின் வளர்ச்சி கருதி கடந்த மாதம் மேல்மாகாண கல்வி அமைச்சின் மூலமாக அதிபருக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிபர் பதவிக்கு விண்ணப்பம் செய்த ஆர்.உதயகுமார், அதிபருக்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.
இருப்பினும் பொறுப்புகளை கையேற்க சென்ற அதிபர் உதயகுமாரிடம் அங்கு அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த ஆசிரியை பொறுப்புக்களை கையளிக்க மறுத்திருந்தார் அதுமட்டுமின்றி அவர் கடந்த சில தினங்களாக பாடசாலைக்கு வருகை தராத நிலையில் அதிபர் அலுவலகத்தை மூடி வைத்திருந்தார்.
இதேவேளை, புதிதாக நியமனம் பெற்ற அதிபர் உதயகுமார், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்றும் வதந்திகள் பரவவே, அவரது நியமனத்தை தற்காலிகமாக ரத்து செய்த மேல் மாகாண முதலமைச்சர், இன்று விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு உண்மைத் தன்மையினைக் கண்டறிந்த நிலையில் உதயகுமாரியமே பொறுப்புக்களைக் கையளிப்பதான தீர்மானத்தை எடுத்தார்.
இந்நிலையில், புதிய அதிபர் ஆர்.உதயகுமார், நாளை செவ்வாய்க்கிழமை இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபர் பதவிக்கான பொறுப்புக்களை ஏற்பார் என்று மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
sekar Tuesday, 10 January 2012 02:31 AM
இனியாவது ரத்மலான இந்து கல்லூரிக்கு நல்லகாலம் பிறக்கட்டும். மன்மதராசா, ராணியின் கொட்டம் அடங்கட்டும்.
Reply : 0 0
jeyarajah Tuesday, 10 January 2012 02:11 PM
நடப்பவைகள் கல்வி திணைக்கள நிர்வாகங்களையும் மீறிப் போவது கவலைதருவதாகவே அமைகின்றது. இந்தப் பிரச்சனைகளை முடிந்தவரையில் தினைக்களமே தீர்த்து விடயம் சந்திக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதிபர்களை ஆசிரியர்கள் அரசியலை பாவித்தால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.நிர்வாக சட்டதிடங்களுக்கு அமைவாகவே யாரும் செயல்பட திணைக்களம் உரய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்துக் கல்லூரிகள் மட்டும் இவ்வாறு நடந்து கொள்வது கவலை அளிக்கின்றது.
Reply : 0 0
Sivaruban Tuesday, 10 January 2012 04:30 PM
மன்மதராசா இஸ் பெஸ்ட் பிரின்சிபல் போர் அவர் ஸ்கூல்.
சேகர் இஸ் மிஸ்லீடிங் தி பீபள் டு தி அதர் ரியதேர்ஸ். ப்ளீஸ் வி ப்ரொபெஸனல் டிகிச்சின் நாட் பர் மதுரே.
Reply : 0 0
arun josep Saturday, 24 March 2012 07:20 AM
எமது அதிபர் மன்மத ராஜன் ஒரு சிறந்த அதிபர். பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். எமது பாடசாலையை மீள திறந்தவரும் அவர்தான். தயவுசெய்து அவரை கேவல படுத்தாதிர்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
42 minute ago
52 minute ago