2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் தகராறு காரணமாக மத்துகமவில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம, போபிட்டிய பாடசாலைக்கு அருகில் இனந்தெரியாத குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மத்துகம, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த டொன் இந்திக்க துஷார என்ற 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மற்றைய நபர் வட்டேவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X