Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 02 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை(3) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிவரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தளை நீரேந்து நிலையத்திற்கான மின் கட்டமைப்பின், அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை - கல்கிசை, கோட்டை, கடுவளை மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்விநியோகத்தடை அமுலாகவுள்ளது.
அத்துடன், கொட்டிக்காவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ரத்மலானை மற்றும் கட்டுபெத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
56 minute ago
2 hours ago