Freelancer / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை வடக்கில் லிட்ரோ எரிவாயு விற்பனையில் இன்று அதிகாலை பத்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான எரிவாயு சிலிண்டர்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடையில் இருந்த 30 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 30,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேனில் வந்த சிலர் போலி சாவியை பயன்படுத்தி முன்பக்க கதவை திறந்து இந்த திருட்டை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் கடையின் முன்புறம் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago