2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விஹாரமஹாதேவி தடுப்பூசி மையம் 24 மணிநேரமும் இயங்கும்

Editorial   / 2021 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று (01) முதல் ‘அஸ்ட்ரா செனெகா' கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

 “ கொழும்பு − விஹாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில்  இன்று காலை 8:30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள், 24 மணிநேரமும் முன்னெடுக்கப்படும் என இராணுவத்  தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த செயற்றிட்டத்தை  இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணிநேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் ஆரம்பிக்கப்பட்டது  இதுவே முதன்முறையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .