2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐஸ்கிறீம் என நினைத்து புண்ணுக்கு போடும் மருந்து உட்கொண்ட 3வயது சிறுவன் மரணம்

Menaka Mookandi   / 2012 மே 22 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

ஐஸ்கிறீம் என நினைத்து புண்ணுக்கு போடும் சிகப்புநிற மருந்தை உட்கொண்ட மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளான் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவிததனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.தொண்டமனலாறு, கெருடாவில் மேற்கைச் சேந்த ராஜசேகரம் றொஷான் (வயது 3) என்ற சிறுவன் தாயார் கடைக்குச் சென்ற சமயம் மேசையில் இருந்த புண்ணுக்கு போடும் மருந்தை, ஐஸ்கிறீம் என எண்ணி உட்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அச்சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்துள்ளான் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

சிறுவனது சடலம் மருத்துவப் பரிசோனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிறுவனது மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .