2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் குடும்ப பிரச்சினை தொடர்பாக ஒரு நாளைக்கு 20 வழக்குகள் பதிவு: சமன் சிகேரா

Menaka Mookandi   / 2012 மே 22 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நாளைக்கு 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தினமும் வரும் பொதுமக்கள் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவில் பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடுகள் வந்தவண்ணமுள்ளதாக குறிப்பிட்டார்.

சில குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாக குடும்பநல உத்தியோகத்தர்களிடம் ஆலோசனைக்காக குடும்ப உறுப்பினர்கள் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்த அவர், காணிப்பிரச்சினை, காதல் விகவாரம், விவாகரத்து, தாபரிப்பு செலுத்தாமை போன்ற குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .