2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 132 பேருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்ட 132 பேருக்கு 2 இலட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரியொருவர் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மல்லாகம், சங்கானை ஆகிய மதுவரித் திணைக்களங்களால், அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்தமை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை, மேலதிகமாக கள்ளு வைத்திருந்தமை, அனுமதிப்பத்திரமின்றி கள் விற்பனை செய்தமை, சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்கள் செய்யப்பட்டன.

இதன்போது, மேற்படி நபர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, நீதிமன்றங்களால் மேற்படி தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .