2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில். சிறுகுற்றம் புரிந்த 204 பேர் கைது: எஸ்.எஸ்.பி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில் சிறுகுற்றங்கள் புரிந்த 204 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம்,

யாழ். நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27 பேரும் அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 30 பேர், சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் 31 பேர், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 04பேர், திருடிய குற்றச்சாட்டில் 03 பேர், வீதி விபத்து 03 பேர், மதுபோதையில் கலகம் விளைவித்த 02 பேர், பொதுஇடத்தில் கலகம் விளைவித்தவர்கள் 10 பேர், சட்டவிரோத மது விற்பனை 10 பேர், பாலியல் வன்முறை 02 பேர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் 02 பேர், கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர்;, மோசடியில் ஈடுபட்ட  02 பேர், சட்டவிரோதமாக துப்பாக்கி தன்வசம் வைத்திருந்தவர் 01, நஷ்டம் ஏற்படுத்தியவர் 01, கப்பம் 01, கத்தியால் வெட்டியவர் 03 பேர், அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்தவர்கள்; 07 பேர், சூழல் மாசடைதல் 02, திருட்டு மின்சாரம் 09 பேர் ஏனைய குற்றங்களுக்காக 53 பேர் உட்பட மொத்தம் 204 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .