2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கடந்த வாரத்தில் 8 இலட்சம் ரூபா கொள்ளை

Kogilavani   / 2014 மே 09 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா 

யாழில் கடந்த வாரத்தில் மட்டும் இடம்பெற்ற 5 கொள்ளைச் சம்பவங்களில் 8 இலட்சத்து 23 ஆயிரத்து 300 ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி கொள்ளை நடவடிக்கைகள் யாழ்ப்பாணம், மானிப்பாய், உரும்பிராய் மற்றும் சாவகச்சேரி உள்ளிட்ட இடங்களிலுள்ள வீடுகள், வியாபார நிலையங்களின் கதவுகள் உடைத்தும், வழிப்பறிகள் மூலமும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X