2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்கள் 11 பேருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் ஜுலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தின் ஜனதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப் பட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குறித்த 11 மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, 11 மீனவர்களையும் பொறுப்பேற்றுக்கொண்ட யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை (24) ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .