2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குற்றங்கள் புரிந்த 183 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 183 பேர்  கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  யாழ். பிராந்திய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்செயல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 29 பேரும் அடித்து காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும்; 34 பேரும் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 33 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகக் கூறப்படும்  08 பேரும்  திருடிய குற்றச்சாட்டில் 05 பேரும் வீதி விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும்  02 பேரும் மதுபோதையில் கலகம் விளைவித்ததாகக் கூறப்படும்; 02 பேரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 02 பேரும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறப்படும்  02 பேரும் சட்டவிரோத மின்னிணைப்பு பெற்றதாகக் கூறப்படும் 06 பேரும் பாலியல் குற்றம் புரிந்தததாகக் கூறப்படும்  02 பேரும் பொது இடத்தில் மது அருந்தியதாகக் கூறப்படும் 03 பேரும் கொலை செய்ததாகக் கூறப்படும்  ஒருவரும் பாரிய குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் 02 பேரும் ஏனைய குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும்  52 பேருமாக  183 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .