2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப் பிரதேசத்திலுள்ள 3 கிணறுகளை புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலிகாமம் கிழக்கு அக்கரைப் பிரதேசத்திலுள்ள மூன்று கிணறுகளை விரைவில் புனரமைத்து தருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேற்படி கிணறுகளானது நீண்ட காலமாக பாலடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால், பிரதேச மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலே  மேற்படி கிராமங்களை புனரமைத்து தருமாறு அக்கரை இடைக்காடு ஞானஒளி மாதர் அபிவிருத்தி சங்கம் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வலி.கிழக்கு அக்கரைப் பகுதி மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக நீரிறைக்கும் இயந்திரமொன்றை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அக்கரை இடைக்காடு ஞானஒளி மாதர் அபிவிருத்தி சங்கத்திற்கு சனிக்கிழமை (03) வழங்கினார்.

இதன்போதே மேற்படி சங்கம் கிணறுகளை புனரமைத்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மகேஷ்வரி நிதியத்தின் நிதியினூடாக நீர் இறைக்கும் இயந்திரம் இச்சங்கத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X