2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தென்மராட்சியில் 15 டெங்கு நோயாளிகள்

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். தென்மராட்சிப் பகுதியில் இம்மாதம் 2ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதிவரை  அடையாளம் காணப்பட்ட 15 டெங்கு நோயாளிகளுக்கு  சிகிச்சையளிக்கப்படுவதாக  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள், தென்னிலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியவர்கள், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களை கொழும்புக்குச் சென்று அழைத்து வந்தவர்களே டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்தை  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X