2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 214 பேர் கைது

Kanagaraj   / 2014 மே 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் மாத்திரம் இடம்பெற்ற குற்றச்செயல்களில் யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 129 பேரும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 85 பேருமாக மொத்தம் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. பி. விமலசேன தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோசடி வழக்கில் 02 பேரும், குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 05 பேரும், அடித்துக் காயப்படுத்திய குற்றத்திற்காக 24 பேரும், சட்டவிரோத மது விற்பனை செய்த 26 பேரும், சந்தேகத்தின் பேரில் 10 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேரும், வீதி விபத்தில் 03 பேரும், அத்துமீறி உள்நுழைந்த குற்றத்திற்காக 02 பேரும், திருட்டுக் குற்றத்திற்காக 08 பேரும், பொதுமக்களிற்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக 02 பேரும், அனுமதிப்பத்திரமின்றி மாடு வெட்டியமைக்காக 05 பேரும், சட்டவிரோத மின்சாரம் பெற்ற 09 பேரும், குடி போதையில் கலகம் விளைவித்த 04 பேரும், பொது இடத்தில் மது அருந்திய 02 பேரும், பாலியல் வல்லுறவு மற்றும் தடை செய்யப்பட்ட வலையில் மீன் பிடித்த குற்றத்திற்காக தலா ஒருவருமாக  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை செய்த 04 பேரும், குடி போதையில் வாகனம் செலுத்திய 05 பேரும், சந்தேகத்தின் பேரில் 09 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 பேரும், பாலியல் வல்லுறவு வழக்கில் 02 பேரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட 43 பேருமாக கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.    
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X