2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சுப்பர்மார்கெட்டில் இரு பால் ரின்களை திருடிய நபருக்கு 3 மாத சிறை

Super User   / 2012 மே 25 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (கவிசுகி)

யாழ்.நகரில் உள்ள சுப்பர்மார்கெட் ஒன்றில இரு பால் ரின்களை திருடிய ஒருவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் 3 மாத சிறைத்தண்டனையும் 1000 ரூபா அபராதமும் இன்று வெள்ளிக்கிழமை விதித்துள்ளது.

இவர் மேற்படி கடைக்குள் நுழைந்து பொருட்களை கொள்வனவு செய்பவர் போன்று நடித்து 1200 ரூபா பெறுமதியான இரண்டு பால் ரின்களை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இவர்  அக்டையின் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் பொலிஸார் கைது செய்து இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்

குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு 3 மாத சிறைத்தண்டனையும் 1000 ரூபா அபாராதமும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அபராதத்தை செலுத்தத் தவறின் மேலதிகமாக ஒரு வார சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என எனத் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .