2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இரும்பு மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் வைத்திருந்த நபருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 மே 25 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இரும்பு மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் மறைத்து வைத்திருந்த நபரை 14 விளக்கமறியலில் வைத்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரும்பு விற்பனையில் ஈடுபடும் ஒருவர் அப்பகுதி வீடொன்றில், பல லட்சம் பெறுமதியான இரும்புகள் மற்றும் பாவணைக்குட்படுத்தப்பட்ட ஆயுதங்களின் பாகங்களை மறைத்து வைத்திருந்த நேரத்தில் யாழ். விண்ஷட அதிரடி படை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அந்நபரை யாழ். நீதிவான் நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில் குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நிதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .