2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் 5867 குடும்பங்கள் மழை, வெள்ளத்தினால் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா
 
யாழ். மாவட்டத்தில் கடந்;த நாட்களில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 5867 குடும்பங்களைச் சேர்ந்த 18979 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் இன்று தெரிவித்தார்.
 
அனர்த்த முகாமைத்துவத்தின் அறிக்கையின் பிரகாரம் ஊர்காவற்துறை பிரதேசத்தில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த 3318 பேரும், பருத்தித்துறை பிரதேசத்தில் 802 குடும்பங்களைச் சேர்ந்த 2839 பேரும்; வேலணை பிரதேசத்தில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1358 பேரும், சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், கரவெட்டி பிரதேசத்தில் 135 குடும்பங்களைச் சேர்;ந்த  571 பேரும், மருதங்கேணி பிரதேசத்தில் 1639 குடும்பங்களைச் சேர்ந்த 4807 பேரும் சங்கானை பிரதேசத்தில் 1276 குடும்பங்களைச் சேர்ந்த 4223 பேரும்; கோப்பாய் பிரதேசத்தில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 219பேரும்; பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .