2025 மே 07, புதன்கிழமை

121 இந்திய படகுகளை அழிப்பதற்கு அனுமதி

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், சண்முகம் தவசீலன்

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 121  இந்திய மீன்பிடி றோளர் படகுகளை அழிப்பதற்கு,  நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

மன்னார் மாவட்ட எல்லை மற்றும் ஊர்காவற்றுறை எல்லைப் பரப்பு ஆகியவற்றுக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில், கடற்படையினரால் இந்திய படகுகள் பல கைப்பறற்ப்பட்டன.

அவற்றில், ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 94 படகுகளும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட  27 படகுகளுமே, இவ்வாறு அழிப்பதற்கு அல்லது ஏலத்தில் விடுவதற்கான அனுமதியை இரு  நீதிமன்றங்களும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் படகுகளை அழிக்குமாறு உத்தரவிட்டுயிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளதெனத் தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழக விசைப்படகுகளை இலங்கை அரசு வீணடிக்காமல் மீண்டும் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X