2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

13 வழக்குகள்: நபருக்கு கடூழியச் சிறைத்தண்டனை

Kogilavani   / 2014 மே 14 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன் 

நீதிமன்றத்தில் 13 வழக்குகளிற்கு ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை 13 வழக்குகளும் முடியும் வரையிலும் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.

பஸ் சாரதியான சுன்னாகம் கந்தரோடையினைச் சேர்ந்த இரத்தினம் உசாந்தன் (30) என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தலைமறைவாகியிருந்த மேற்படி நபர் செவ்வாய்க்கிழமை (13) ஓமந்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு, சுன்னாகம் பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

இந்நபருக்கு எதிராக பஸ்ஸின் இலக்கத்தகடை மாற்றி மாற்றி செலுத்தியமை, அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, பிறிதொரு நபரின் அனுமதிப்பத்திரத்தில் வாகனம் செலுத்தியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைகளைச் செய்யவிடாமை, நீதிமன்றத்தினை அவமதித்தமை உள்ளிட்ட 13 வழக்குகள் தொடரப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X