2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

151 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதகல் கடற்பரப்பில் 151 கிலோ 600 கிராம் கஞ்சாவுடன் படகில் பயணித்த இருவரை நேற்று (22) கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பரப்பில் சந்தேகத்துக்கு இடமான முறையில், பயணித்த படகொன்றை மறித்து சோதனையிட்ட போது படகினுள் 65 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 151 கிலோ 600 கிராம் கஞ்சா போதை பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், படகில் இருந்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களையும் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருட்களையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X