2025 மே 21, புதன்கிழமை

யாழில் கிராமிய மட்ட கடற்றொழில் அமைப்புக்கள் உருவாக்கம்

Super User   / 2011 மே 24 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதியாக கிராமங்கள் தோறும் கிராமிய கடற்தொழில் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ். கடற் தொழில் நீரியல்வளத் திணைக்கள தலைவர் இ.ரவீந்திரன் தெரிவித்தார்.

வட கடல் மீனவர்கள் தங்களது தொழில் வளங்களை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை கிராமிய கடற்றொழில் அபிவிருத்திச் அமைப்புக்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து ஆராந்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் என யாழ். கடற் தொழில் நீரியல்வள திணைக்கள தலைவர் இ.ரவீந்திரன் மேலும்; தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .