2025 மே 21, புதன்கிழமை

மாதகல் மாரீசன்கூடல் பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிக வீடுகள்

Suganthini Ratnam   / 2011 மே 30 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வலிகாமம் தென்மேற்குப் பிரதேசசபைக்குட்பட்ட மாதகல் மாரீசன்கூடல் பகுதியில் அண்மையில் மீள்குடியேறிய மக்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கும்  நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்படுவதுடன்,  தனியார் நிறுவனங்களும் வீடுகள் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மாதகல் பகுதியில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பிரதேச செயலாளர் ரீதியாக பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவர்களின் அடிப்படைத் தேவைகள் தற்போது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .