Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 30 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
சாவகச்சேரி நுணாவில் மேற்கு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கடத்தி செல்லப்பட்ட 15 வயது சிறுமியை சாவச்சேரி பொலிஸார் மீட்டதுடன் கடத்தி சென்றதாக கூறப்படும் நபரையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பாக பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் பயனாக 10 தினங்களின் பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமியையும் சந்தேகநபரையும் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்செய்தனர். இதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுததுமாறும் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரகைளை சாவச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .