2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தாக்குதலுக்கு சிறி ரெலோ கண்டனம்

Super User   / 2011 ஜூலை 30 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை  சிறி ரெலோ கட்சி வன்மையாகக்கண்டிக்கிறது என அக்கட்சியின் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் உலகநாடுகளிற்கு கூறிவரும் நிலையில்;  இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்டிருப்பதானது உலகலாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு ஓர் பாரிய பின்னடைவையை தோற்றுவித்திருக்கிறது.

கடந்த உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் அளவெட்டிப்பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட  தமிழ் கட்சி ஓன்றின் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலினை இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்டதனால் அரசாங்கம் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேரிட்ட இந்த தருணத்தில் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுத்துவரும் உதயன் பத்திரிகையின் உதவி ஆசிரியர்  மீது உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிப்பதுடன் இச்செயல் வடக்கில் அரசாங்கத்திற்கு மேலும்  பாரியபின்னடைவையே தோற்றுவித்திருக்கிறது.

சுயநல அரசியல்வாதிகளும் அவர்களின் இவ்வாறான அடாவடித்தனங்களும் இனிமேல் எமக்கு வேண்டாம் என்ற நோக்கோடே தாம் நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்ததாகவும், வடக்கு மக்கள் மீது அரசாங்கம் உண்மையான அக்கறை கொண்டிருக்குமாயின் இத்தாக்குதல் சம்பவத்திற்கு பின்னனியில் உள்ளோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னிருத்தவேண்டும் எனவும் மக்கள்  கோரிக்கைவிடுக்கின்ற அதேவேளை சுயநல அரசியல் வாதிகளின்  இவ்வாறான தாக்குதல் தமது குரல்வளைகளை நசுக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறு இருப்பினும், வடக்கு மக்கள் மீது அரசாங்கம் உண்மையாக கரிசனை கொண்டிருக்கமாயின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் ஈடுபட்டோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என  சிறிரெலோ கட்சி வேண்டுகோள்விடுக்கிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X