2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். முஸ்லிம்களுக்கு உதவ தொண்டு நிறுவனங்கள் முன்வருகை

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களுக்கு வீடுகள், வீதி நிர்மாணங்கள் மற்றும் சுகாதார வசதிகளைச் செய்வதற்கு இரண்டு தொண்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து மீளக்குடியேறிய மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு யாழ். முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு விசேட செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X