2025 மே 19, திங்கட்கிழமை

நல்லூர் ஆலய சூழலில் போலிச் சாமியார் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பணிப்பு

Super User   / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர் உற்சவ காலத்தில் ஆலய சுழலில் சோதிடம் மற்றும் குறி சொல்லும் நடவடிக்கையில் போலிச் சாமியார்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை நம்மி சோதிடம் மற்றும் குறி கேட்க வேண்டாம் என பக்தர்களுக்கு நல்லூர் கந்தன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

நல்லூர் கந்தனின் உற்சவ காலத்தை பயன்படுத்தி போலிச் சாமியார்கள் பலர் குறி சொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பக்தர்களை ஏமாற்றி பெரும் தொகையில் பணத்தைக் பெறுகின்றனர். இவ்வாறானவர்களை இனம் கண்டு அவர்களிடம் எதிர்காலம் பற்றிய சோதிடங்களை கேட்க வேண்டாம் என பக்தர்கள் கேடகப்பட்டுள்ளனர்.

அத்துடன் தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மற்றும் நம்பிக்கையான சோதிடர்களிடம் மாத்திரம் தங்களது எதிர்காலம் தொடர்பாக கேட்டு பயன் பெறுமாறும் நல்லூர் கந்தன் ஆலய பரிபாலன சபையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X