2025 மே 19, திங்கட்கிழமை

அரசியல் நோக்கம் கருதிய திட்டமிட்ட செயற்பாடே கிறீஸ் பூதம்: ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(என்.பரமேஸ்வரன், கவிசுகி)

'நாட்டில் கிறீஸ் பூதம் என்று எதுவுமில்லை. அரசியல் நோக்கம் கருதிய திட்டமிட்ட செயற்பாடாகவே இந்த கிறீஸ் பூதங்களின் விவகாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' என யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

'பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இந்த பொறுப்பினை நாம் சரிவர செய்து வருகின்றோம். இந்நிலையில், சட்டத்தையும் ஒழுங்கையும் ஒருசிலர் கையில் எடுப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். நாவாந்துறை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவம் மற்றும் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.

இதில் யாழ். கட்டளைத் தளபதி மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரும் யாழ் மாவட்டத்துக்கான பதில் பிரதி பொலிஸ் மா அதிபருமான நீல் தலுவத்த ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • hari Tuesday, 23 August 2011 11:34 PM

    நீங்கள் பொதுமக்களை பாதுகாத்த விதம் ஏற்கனவே உலகுக்கு தெரியும்.

    Reply : 0       0

    Jakkoo Tuesday, 23 August 2011 11:36 PM

    என்ன அரசியல் நோக்கம் என்று புரியும் படி சொல்ல முடிமா? அப்படியே இருக்கட்டும் எதற்காக அப்படி வருபவர்கள் உங்களிடம் தஞ்சம் அடைய வேண்டும்? அப்படியானால் உண்மை நிலவரம் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்? ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே??? என்னம்மோ நடக்குது மர்மமா இருக்குது?

    Reply : 0       0

    NAKKIRAN Wednesday, 24 August 2011 01:06 AM

    அவர் சொல்வது உண்மை உண்மையைதவிர வேறில்லை.
    அரசால் அரசியல் நோக்கத்துக்காக .

    Reply : 0       0

    MANITHAN DA MANITHAN Wednesday, 24 August 2011 02:56 AM

    அய்யா சாமி பூதம் என்று இலங்கையில் மற்றும் அல்ல உலகத்திலைய இல்லை . அது எங்களுக்கும் தெரியும். ஆனால் இப்போ பூதம் யன்று வெளிய வருவது எல்லாம் அரக்கர்கள்

    Reply : 0       0

    Manithan Wednesday, 24 August 2011 03:01 AM

    அய்யா நாங்களும் கிரீஸ் பூதம் எண்டு ஒண்டு இல்லைண்டுதான் சொல்லுறோம், அதாவது கிரிசால செஞ்ச பூதமேண்டு ஒண்டு இல்லை. ஆனா க்ரிசைப் பூசிக்கொண்டு திரியினம் எண்டுதான் சொல்லுறம். இப்பவாவது புரியுதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X