Menaka Mookandi / 2011 நவம்பர் 09 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள நான்காம் வாட்டில் கஞ்சா பைக்கற்றுக்களை தன்வசம் வைத்திருந்த குடும்பப் பெண் ஒருவர் யாழ்.பொலிஸாரினால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குடும்பப் பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட வந்தவர் எனவும் இவரிடம் பல ஆயிரம் ரூபா பெறுமதியான கஞ்சா பைக்கற்றுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், அவை பறிமுதல் செய்யப்பட்டள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று மாலை ஆஜர் படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago