2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நெல்லியடி தீ விபத்தில் இரு கடைகள் முற்றாக சேதம்; ஒருவர் காயம்

Menaka Mookandi   / 2012 மே 22 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நெல்லியடி சந்தைப் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற தீ விபத்தொன்றின் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த பகுதியில் அமைந்துள்ள தளபாடக் கடையும், தங்க ஆபரணங்கள் விற்பனைக் கடையுமே இந்த தீ விபத்தில் சிக்கி தேசமடைந்துள்ளன.  திடீரென ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக தீ பரவியதாகவும் அணைக்க முடியாத நிலையில் மற்றைய கடைக்குத் பரவியதுடன் மற்றைய கடையும் முற்றாக சேதமடைந்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது ஒருவர் தீக்காயங்களுடன் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .