2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் குழந்தையை விற்க, வாங்க முயன்றவர்கள் கைது

Suganthini Ratnam   / 2012 மே 23 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                  (கவிசுகி)

தான் பிரசவித்த குழந்தையை விற்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் தாயொருவரும் இக்குழந்தையை வாங்க முயன்றதாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவரும் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவில் பிறந்த இக்குழந்தையையே இத்தாய் விற்க முயன்றதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

விற்பதற்காக இன்னொரு பெண்ணிடம் இக்குழந்தையை ஒப்படைத்துவிட்டு கடிதம் மூலம் தான் குழந்தையை விற்பனை செய்வதை இத்தாய்   உறுதிப்படுத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இவர்கள் இருவரும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .