2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

முகமாலை வாகன விபத்தில் ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்

Menaka Mookandi   / 2012 மே 23 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

ஏ - 9 வீதியின், முகமாலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீதியினூடாகப் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கஜஸ் வாகனமொன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியாவைச் சேர்ந்த த.உதயகுமார் (வயது 43) என்ற 3 பிள்ளைகளின் தந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனழிக்காது உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபரான வவுனியாவைச் சேந்த க.கணேசபாலன் (வயது 35) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக முகமாலைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த வாகன விபத்துத் தொடர்பாக முகமாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .