2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவோர் பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்

Menaka Mookandi   / 2012 மே 25 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி சட்டவிரோதமான முறையில் அனுப்பிவைக்கப்பட்டு ஏமாற்றுவோர் தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில், ஏமாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

அந்தவகையில் மலேசியாவிற்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பப்பட்ட பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞன் அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்து அடிமையாக வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த இளைஞனின் சகோதரி விஜிதா என்பவர் முறையிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு விரைந்து செயற்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவலை கொடுத்து அடிமையாக வைக்கப்பட்டு இருந்த இளைஞனை கடந்த மே 23ஆம் திகதி மீட்டுள்ளது.

இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் சட்டரீதியற்ற முறையில் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .