2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ்.குடநாட்டில் குற்றச் செயல்களைத் தடுக்க இரவில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கை : டி.ஐ.ஜி பெரேரா

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் அதிகரிக்கும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இரவில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.ஈ.எல் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ்.மானிப்பாய் பகுதிச் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு காத்தான்குடியில் கொத்தடிமையாக வைக்கப்பட்ட நிலையில் யாழில் வியாபார நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட வேளை மீட்கப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்தச் சிறுவன் கடத்தலில் ஈடுபட்ட மூன்று வியாபாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் காத்தான்குடியில் தலைமறைவாக இருப்பதினால் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்.நகரப்பகுதியில் 15 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 வயது இளைஞனைக் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன.

மானிப்பாய் பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக விசாணை மேற்கொண்டு குற்றவாளிக்கை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது

ஊர்காவற்துறைப் பகுதியில் இரும்பு வியாபாரத்தில் ஈடபட்டவர்கள் வலுவிழந்த 30 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேசத்தில் தாலிக்கொடியையும் தங்கச் சங்கிலியையும் திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணைமேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .