2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் றிசாட்டின் கருத்துக்கு யாழ். கத்தோலிக்க தேவாலயங்களில் கண்டனம்

Super User   / 2012 மே 27 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசபிற்காக யாழ். கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட பிராத்தனை நடைபெற்றதுடன் அமைச்சர் றிசாட்டின் கருத்துக்களைக் கண்டித்து மதகுருமார் கருத்துக்களை வெளியிட்டனர்

"ஒரு மதத்தை புண்படுத்தும் விதமாகவும் மத பெரியவர்களை மதிக்க தெரியதா இஸ்லாமிய அமைச்சர் றிசாட், முதலில் பாடசாலையில் ஒழுங்காக கல்வியை  கற்று வரும் படியும் மதங்களின் நல்லிணக்கத்தை சிதைக்கும் விதமான தனது அரசியலுக்காக மதத்தைப் புண்படுத்துவது தறவு

இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் ஒருவரே. யாரும் இந்த பூமில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. மதங்களையும் மனிதர்களையும் றிசாட் புரிந்து கொள்ள வேண்டும்

மதங்களை இழவுபடுத்துவது ஆண்டவனை இழிவுபடுத்துவதற்கு சமன். கடவுளின் பேரால் றிசாட்டை நாங்கள் மன்னிக்கின்றோம். அவருக்காகவும் அவரின் அரசியல் வாழ்வுக்காகவும் பிராத்திக்கின்றோம்" என யாழ். கல்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்ற விசேட பிராத்தைனையின் போது தெரிவிக்கப்பட்டது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .