2025 மே 19, திங்கட்கிழமை

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்காமையினால் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்

Super User   / 2012 ஜூலை 22 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ். உயர் தேசிய கணக்கியல் வர்த்தக முகாமைத்துவ பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பு தொடர்பாக யாழ். மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகள் பல்வேறு தரப்பினரிடமும் மகஜர் கையளித்திருந்தனர்.

எனினும் அதற்கு தீர்க்கமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் சுழற்சி முறையிலான ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு நியமனம் தொடர்பாக கலந்துரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நியமனம் வழங்கப்படாமலுள்ள சுமார் 300 பட்டதாரிகளும் தனிப்பட்ட ரீதியாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்கிழமை 300 பேரும் தனிப்பட்ட ரீதியில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். இவர்கள் சார்ப்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X