2025 மே 19, திங்கட்கிழமை

வேதாரணிய கடற்கரையில் கரையொதுங்கிய படகு பருத்தித்துறை மீனவருடையது: கணேசமூர்த்தி

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

இந்தியா, வேதாரணிய கடற்கரையோரமாக கரையொதுங்கிய கண்ணாடி இழைப் படகு பருத்தித்துறை மீனவருடையது என இனம் காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய நீதியல் வளத் திணைக்கப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

கடந்த மாதம் கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக இந்த படகு இந்திய வேதாரணியப் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக வேதாரணிய மீன்பித்துறையினர் தமக்கு அறிவித்தனர்.

இந்தப் படகை மீட்டு வருவதற்காக கடற்படையினரின் உதவி கோரப்பட்டது. தற்போது அந்தப் படகை பருத்தித்துறைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய நீரியல்வளத் திணைக்கப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்த படகு இந்தியக் கடற்கரையில் கரையொதுங்கியமை தொடர்பாக இந்த படகின் உரிமையாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X