2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.கரவெட்டிப் பிரதேச செயலாளராக சண்முகராஜா சிவஸ்ரீ பதவியேற்பு

Kogilavani   / 2012 ஜூலை 24 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஜெ.டானியல்)
யாழ். கரவெட்டிப் பிரதேச செயலாளராக யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் சண்முகராஜா சிவஸ்ரீ கடமையை நேற்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சண்முகராஜா சிவஸ்ரீ, கரவெட்டி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்று 11 மாதங்களாக யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமை புரிந்தார்.

தற்போது மீண்டும் கரவெட்டிப் பிரதேச செயலகத்திற்குப் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை, கரவெட்டிப் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி சுபாஜினி மதியழகன் நல்லூர் உதவிப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரவெட்டிப் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இரா.வரதீஸ்வரன் வடமாகாண உள்ளூராட்சி புனர்வாழ்வு புனரமைப்பு கூட்டுறவு கிராமி அபிவிருத்தி கைத் தொழில் சமூக சேவைகள் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமாரிப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X