2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை மாணவர் கைது விவகாரம்; ஜனாதிபதிக்கு மகஜர்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தரையாடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராஜகுமாரன் இன்று தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கும், உயர்க்கல்வி அமைச்சருக்கும் மகஜரொன்றை அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ். பல்கலைக்கழத்தில் மாணவர்களின் விடுதலை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்றினை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று காலை மேற்கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது, மாணவர்களை விடுதலை செய்வது குறித்து பல்கலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து குழு ஒன்றினை நியமித்து அதனூடாக மாணவர்களின் விடுதலை குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதேவேளை, மாணவர்களின் விடுதலை குறித்து இங்கு பல்வேறு தரப்பினர்களுடனும் கலந்துரையாடிய போதிலும் எந்தவிதமான பயனுமில்லாத நிலையிலும், பல்கலைக்கழக நிர்வாகம் தகுந்த அதிகாரிகளுடன் இறுக்கமான முடிவுகளை எடுக்க தயங்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதன்காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ள குழுவினர் இணைந்து மாணவர்களின் விடுதலை குறித்த மகஜரை, ஜனாதிபதிக்கும், உயர்கல்வி அமைச்சருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும், பல்கலைக்கழக சமூகம் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .