2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். நகர அங்காடி வியாபாரிகளுக்கு புதிய கடைகள் விரைவில்

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

அங்காடி வியாபாரிகளுக்கான புதிய கடைகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'யாழ். நகரப்பகுதிகளில் அமைந்துள்ள அங்காடி வியாரிபாரிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக புதிய கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது.

யாழ். வேம்படி சந்திக்கு அருகாமையில் உள்ள தனியார் காணி ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.  அதில், யாழ். நகர் பகுதியில் உள்ள 96 கடைகளுக்கு மிக விரைவில் கடைகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

அதன் பின்னர் யாழ்.நகரப்பகுதிகளில் அங்காடி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஈடுபடும் அங்காடி வியாபாரிகளின் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என யாழ்.மாநகர முதல்வர் மேலும் கூறினார்.
நிர்மாணிக்கப்படும் கடைத்தொகுதி


  Comments - 0

  • Nishanth Saturday, 19 April 2014 04:29 PM

    புதிதாக கடை ஆரம்பிப்பவர்கள் என்ன செய்வது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X