2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
 
யாழ், வீதிப்பகுதி வீடொன்றில் பணமும் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி லோரன்ஸ் தெரிவித்தார்.

வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லாத சமயத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

திருட்டு சம்பவம் குறித்து யாழ். குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .