2025 ஜூன் 19, வியாழக்கிழமை

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 ஜனவரி 10 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் விநியோகப்பதற்காக அவர் எடுத்துச்சென்ற பத்திரிகைகளையும் எரித்து நாசமாக்கியுள்ளனர்.

அத்துடன், அவரது மோட்டார் சைக்கிளுக்கும் தீ மூட்டி நாசப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை 5.30 மணியளவில் அல்வாய், அத்தாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பத்திரிகை விநியோகஸ்தர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நாகேஸ் பிரதீபன் (வயது 32) என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார் என்று தெரிவித்த நெல்லியடி பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .