2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி

யாழ். போதனா வைத்தியசாலையின் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் 3 நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை நேற்று புதன்கிழமையிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி மேலதிக நேரக் கொடுப்பனவை அதிகரித்தல், விசேட தரத்திற்கான நியமனங்கள் வழங்குதல், பட்டதாரி நிறைவுகாண் தொழில் வல்லுநர்கள் நியமனம், தீர்வையற்ற வாகன அனுமதி உட்பட  12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட சுகயீனப் போராட்டத்தின் பின்னர் சுகாதார அமைச்சால் எந்தவித பதிலும் கிடைக்காத பட்சத்திலேயே சுகயீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் தலைவர் என்.ஜெயபாஸ்கர் தெரிவித்தார்.

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்களின் தாய்ச்சங்கம் ஒழுங்கு செய்துள்ள சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை மற்றும் மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் கடமையாற்றும்  எக்ஸ்கதிர் தொழில்நுட்பவியலாளர்கள், இயன் மருத்துவவியலாளர்கள் நேற்று ஒருநாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்தனர்.  இன்று மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களும் நாளை மருந்தாளர்களும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால் வைத்தியசாலையின் மருந்து வழங்கும் பிரிவு, ஆய்வுகூடம், எக்ஸ்கதிர் பிரிவு, இயன் மருத்துவப்பிரிவு ஆகியன மூடப்பட்டிருக்கும். எனினும் அவசர நோயாளர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .