2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 13 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.சுமித்தி

கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த  மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் என்ற 16 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கீரிமலை, சேந்தாங்குளம் கடலுக்கு நேற்று சனிக்கிழமை காலை 10 மணியாளவில் இரண்டு சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சிறுவன் காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .