2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழில் காணி அற்றவர்களுக்கு காணி வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

30 வருடங்களுக்கு மேலாக சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் காணியற்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழவிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர்களுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று காணி மேற்படி ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட அதிகாரி என்.விமலராஜ் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு காணிகளற்ற நிலையில் வாழ்பவர்கள் மற்றும் காலாகாலமாக காணிகளின்றி வாழும் குடும்பங்கள் தமது பிரிவு கிராம சேவகரின் உறுதிப்படுத்தப்பட்ட கடிதமுடன், பிரதேச செயலாளர் ஊடாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலையில் காணிகள் வழங்கப்படும் அவர் கூறினார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் காணி சீர்திருத்த ஆணைக்குழவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவினால் பரிசீலிக்கப்பட்டு, காணிகளற்றவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X