2025 ஜூன் 18, புதன்கிழமை

இரண்டு கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொட்டடி பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். விசேட அதிரடி படையினர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த இளைஞர் இரண்டு கிலோ கஞ்சாவினை விற்பனை செய்ய முற்பட்டபோது, யாழ். கொட்டடி பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .